Monday, November 03, 2008

டைட்டானிக் மூழ்கியது ஏன்?


பக்கத்திலேயே வந்து கொண்டிருந்த கப்பலின் ரேடியோ ஆப்பரேட்டருடன், டைட்டானிக் கப்பலின் ரேடியோ ஆப்பரேட்டர் சண்டையிடாமல் இருந்திருந்தால் டைட்டானிக் கப்பல் மூழ்காமல் காப்பாற்றப்பட்டிருக்கும் என்று இப்போது வெளியிட்ட ஒரு டாக்குமென்டரியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 96 ஆண்டுகளுக்கு முன் சுமார் 1500 பேரை பலிகொண்ட டைட்டானிக் கப்பல், கடலில் மூழ்கிப்போனதற்கு அந்த கப்பலின் ரேடியோ ஆப்பரேட்டர்தான் காரணம் என்று அது தெரிவிக்கிறது. கடந்த 1912 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ம் தேதி, பனிப்பாறை ஒன்றில் மோதி கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் 25 வயது ஜாக் பிலிப் என்பவர் ரேடியோ ஆப்பரேட்டராக பணியாற்றி வந்தார். அப்போது டைட்டானிக் கப்பலுக்கு சுமார் 20 மைல்களுக்கு அப்பால் எஸ்எஸ் கலிபோர்னியன் என்ற இன்னொரு கப்பலும் வந்து கொண்டிருந்தது. அந்த கப்பலுக்கு எதிரே இருக்கும் பனிப்பாறை தெரிந்திருக்கிறது. அதனை டைட்டானிக் கப்பலுக்கு தகவல் சொல்ல முயன்ற போது டைட்டானிக் ஆப்பரேட்டர், அவரது கப்பலில் பயணம் செய்து கொண்டிருக்கும் பயணிகளுக்கு டெலிவரி செய்ய வேண்டிய ஏராளமான வாழ்த்து தகவல்களை கையில் வைத்துக்கொண்டு அதைத்தான் அனுப்பிக்கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த நேரத்தில் எஸ் எஸ் கலிபோர்னியன் கப்பலில் இருந்த ரேடியோ ஆப்பரேட்டர் சிரில் ஈவன்ஸூடன், டைட்டானிக் ரேடியோ ஆப்பரேட்டர் பிலிப் வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருக்கிறார். இதனால் எரிச்சலடைந்த சிரில் ஈவன்ஸ், ரேடியோவை ஆஃப் செய்து விட்டார். அதாவது டைட்டானிக், பனிப்பாறையில் மோதுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்தான் ரேடியோ ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் டைட்டானிக் கப்பலில் இருந்து வந்த அபாய அறிவிப்பு ( எஸ் ஓ எஸ் ), பக்கத்து கப்பலான எஸ் எஸ் கலிபோர்னியனுக்கு வந்து சேரவே இல்லை. இதனால் டைட்டானிக் கடலில் மூழ்கி, 1523 பேர் இறந்திருக்கிறார்கள். ரேடியோ ஆப்பரேட்டர் பிலிப்பும் இறந்து விட்டார். டைட்டானிக், முழுமையாக கடலில் மூழ்குவதற்கு இரண்டு மணி நேரம் ஆகியிருக்கிறது. இந்த தகவல் மட்டும் 20 மைல்களுக்கு அப்பால் வந்து கொண்டிருந்த எஸ் எஸ் கலிபோர்னியனுக்கு தெரிந்திருந்தால் டைட்டானிக்கில் உள்ள அத்தனை பேரையுமே காப்பாற்றி இருக்கலாமாம். த அன்சிங்கபிள் டைட்டானிக் என்ற டாகுமென்டரியில் இந்த தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் இருந்து நியுயார்க்கிற்கு சென்று கொண்டிருந்த டைட்டானிக், ஏப்ரல் 14, 1912 இரவில் பனிப்பாறையில் மோதியது. மோதிய பின், 2 மணி 40 நிமிடத்தில், அதாவது அடுத்த நாள் அதிகாலையில் அது கடலில் முழுமையாக மூழ்கி இருக்கிறது. அந்த சமயத்தில் டைட்டானிக்தான், உலகின் மிகப்பெரிய பயணிகள் நீராவி கப்பலாகவும், அதிக தொழில் நுட்பத்தை கொண்டிருந்த கப்பலாகவும் இருந்தது.

நன்றி : தினமலர்

Friday, October 24, 2008

49 O


49 O. இதை ஏதோ பேருந்து எண் போலிருக்கே என எண்ணி அலட்சயமாக இருந்து விடாதீர்கள். இது இந்தியாவின் தலையெழுத்தையே மாற்ற வல்லமை படைத்த மந்திர எண்.

நம் நாட்டில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல். தொட்டில் முதல் இடுகாடு வரை ஊழல். இந்த ஊழல் அரசியல்வாதிகளைப் பார்க்கும் போது மிஸ்டர் பொதுஜனத்திற்கு எரிச்சல் வருவது இயல்புதானே. அந்த எரிச்சலை வெளிப்படுத்துவதற்கு வழிதான் என்ன? நாம் என்ன சொல்லி இந்த ஊழல்வாதிகள் கேட்கப் போகிறார்கள்? நம்முள் அநேகமான பேர், இருக்கும் திருடர்களில் யார் கொஞ்சம் தேவலை என யோசித்து அவருக்கு ஓட்டு போடுவதை வழக்கமாக வைத்துள்ளோம். அப்படி இல்லையெனில், தேர்தலையே புறக்கணித்து விட்டு ஹாயாக வீட்டில் சன் மியூசிக் பார்த்துக் கொண்டு இருந்து விடுகிறோம். நமது வாக்கை கூச்சமில்லாமல் வேறு யாராவது கள்ளத் தனமாக போட்டு விடுகின்றனர். இதற்கெல்லாம் விடை காணும் எண்தான் 49 O.

இந்த தேர்தல் விதிமுறையின் படி, நீங்கள் தாராளமாக வாக்கு சாவடிக்கு போகலாம். கையில் கரும்புள்ளி (!) வைத்துக் கொள்ளலாம். ஆனால் வாக்கு மட்டும் அளிக்க தேவையில்லை. 49 O பயன்படுத்தி, யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என வாக்கு சாவடி அதிகாரியிடம் கூலாக தெரிவித்து விட்டு வந்து விடலாம்.(மின்னணு இயந்திரம் தற்போது நடைமுறையில் இருப்பதால் 49 O-க்கான பிரத்தியேக பொத்தான் வாக்கு இயந்திரத்தில் இருப்பதில்லை.) இதனால் என்ன பிரயோஜனம்? அதற்கு வீட்டிலேயே இருந்து விட்டு போகலாமே என நீங்கள் கேட்பது புரிகிறது. 49 O பயன்பாடு போட்டியிடும் வேட்பாளார்களின் வயிற்றையே கலக்கி விடும்.

உதாரணமாக, ஒரு தொகுதியில் மொத்தம் 500 வாக்குகள் பதிவாகியுள்ளது என வைத்துக் கொள்வோம். XX - 100 வாக்குகளையும், YY - 120 வாக்குகளையும் ZZ - 50 வாக்குகளையும் , 49 O மூலம் , யாரையும் தேர்ந்தெடுக்காதவர்கள் 230 பேரும் உள்ளனர் என வைத்துக் கொள்வோம். இப்பொழுது, அனைத்து வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை விட 49 O பயன்படுத்தியர்கள் எண்ணிக்கை அதிகம். இதனால், அந்த குறிப்பிட்ட தொகுதியில் மறு வாக்கு பதிவு நடத்த பட வேண்டும். அது மட்டுமல்லாமல், அந்த தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் மீண்டும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க படும். இந்த விதிமுறை 1961ம் ஆண்டு முதல் உள்ளது. ஆனால், இது வரை எந்த அரசியல்வாதியும், பின்விளைவுகளுக்கு அஞ்சி, இந்த விதிமுறை பற்றி மக்களிடம் கூறியது இல்லை. ஆக, நம் வாக்காளர்களுக்கு இந்த விதிமுறையை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். இந்த கட்டுரையை படித்து தெரிந்துக் கொண்டவர்கள், தேர்தலின் போது, இந்த விதிமுறை பற்றி தங்கள் நண்பர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்!!!

Source

49-O. Elector deciding not to vote.-If an elector, after his electoral roll number has been duly entered in the register of voters in Form-17A and has put his signature or thumb impression thereon as required under sub-rule (1) of rule 49L, decided not to record his vote, a remark to this effect shall be made against the said entry in Form 17A by the presiding officer and the signature or thumb impression of the elector shall be obtained against such remark.

The Conduct of election rules,1961

# தேர்தல் ரத்து செய்வது பற்றிய ஷரது பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது!

Thursday, October 09, 2008

முதலாளியால் வெறுக்கப்பட 10 காரணங்கள்




கிசுகிசுவிற்கு தடா!!!

ஒரு நிறுவனத்தை உதறி விட்டு வெளியே வரும் அநேகமானவர்கள்,வேலையை விட்டதற்கு கூறும்
காரணங்களில் முதன்மையானது, சீர்கெட்ட நிர்வாகம்

என்பதுதான். நம் நிறுவனத்தை நாம் வெறுப்பதில்
இருக்கும் நியாயத்தைப் போல நம்மை நம் முதலாளிகள்
வெறுப்பதிலும் நியாயம் இருக்கதானே செய்யும்.
பணியாளர்களின் மனநிலையைப் பற்றி ஆராய்ந்து வரும்
உளவியலாளர் சூசன் நிக்கல்சன், நம்மை, நம்
முதலாளிகள் வெறுக்க 10 நியாயமானக் காரணங்களைப்
பட்டியலிடுகிறார்...

### நம்பகத்தன்மை இல்லாதது:
ஒரு பணியை ஒருவரிடம் ஒப்படைத்தால், குறிப்பிட்டக் கால அளவுக்குள் அந்தப் பணியை முடிப்பது அவசியம். ஏதாவது சாக்குபோக்கு
சொல்லி பணியை முடிக்காமல் இருப்பது பாஸுக்கு சங்கடத்தை ஏற்படுத்துமாம்.

### தவறுகளை திருத்திக்கொள்ளாமல் இருப்பது:
பணியில் ஏதாவது தவறு நேர்ந்தால் அதனைக் கெளரவமாக ஒப்புக்
கொள்வது உத்தமம். கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலைனு சமாளிக்க
நினைத்தால் பாஸின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமாம்.

### கிசுசிசு பேசுவது:
கிசுகிசு பேசுவது பாஸுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தும் என்பதில்
ஐயமில்லை. கிசுகிசுக்களில் பாஸின் தலையே உருள வாய்ப்புண்டு என்பது ஓர் காரணம். சக ஊழியர்கள் மேலிருக்கும் காழ்ப்புணர்ச்சிதான் காரணம் என்ற அபிப்ராயமும் பாஸுக்கு வந்து விட வாய்ப்புண்டாம்.

### எதிர்மறையாக பேசுவது:
ஆபிஸ் மீட்டிங்குகளில், யார் எதை சொன்னாலும், இது முடியாது,
அது முடியாது என எதிர்மறையாக பேசுபவர்களை முதலாளிகள்
விரும்புவதில்லையாம்.

### மாற்றங்களை விரும்பாதது:
ஆபிசில் புதிதாக நடைமுறைக்கு வரும் விஷயங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பது பாஸுக்கு பிடிக்காதாம். பல நேரங்களில் முதலாளியாலே தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கூட அந்த புது விஷயம் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கலாம்!

### நாற்றம் அடிப்பது (ஹி.ஹி..)
வியர்வை நாற்றம், சாக்ஸ் நாற்றம், பூண்டு சாப்பிட்டு விட்டு செல்வது போன்ற கப்பு விஷயங்கள் பாஸ்களுக்கு பிடிப்பதில்லை! (யாருக்கும் பிடிக்காது...)

### மிஸ்டர் லேட்டாக இருப்பது:
ஆபிசுக்கு லேட்டாக வந்து, டயர் பஞ்சர் என ஆதி காலத்து சாக்கை சொல்வது, அடிக்கடி லீவ் போடுவது போன்ற சமாச்சாரங்கள் பாஸ்களுக்கு கோபத்தை ஏற்படுத்துமாம்.

### அதிகப்பிரசங்கி தனம்:
பாஸ் கூறும் வேலையை செய்தால் போதும். முந்திரிக்கொட்டை மாதிரி, பாஸ் சொல்லாத எதையாவது செய்து தொலைத்தால், கதை கந்தல்! எள்ளுனு சொன்னா எண்ணையா இருப்பதை அனைவரும் விரும்புவதில்லை.

### ஆபிசிலிருந்து சொந்த விஷயங்களை செய்வது:
ஆபிஸ் கம்ப்யூட்டரில் ஆர்க்குட்டை நோண்டுவது, ஆபிஸ் போனில் சொந்த விஷயங்களை மணிக்கணக்காகப் பேசுவது போன்றவைகள் பாஸ்களுக்கு ஆகாதாம்.

### கத்துவது, சண்டை போடுவது:
அமைதியான டீமைதான் (Team) எந்த பாஸும் விரும்புவார். அடிக்கடி யாரையாவது வம்பு செய்து கூச்சல் போடுவது, ஒட்டு மொத்த குழுவின் வேலையையும் கெடுக்கும்.

ஆங்கில கட்டுரை உபயம்:
news.com.au இணையதளம்